மயானத்தில் புதைக்கப்பட்டபின் வெளியே வர முயற்சித்த பெண்?
கிறீஸ் நாட்டில் இறந்ததாகக் கருதப்பட்ட பெண்ணொருவர் சவப்பெட்டியில் வைத்து புதைக்கப்பட்டபின் வெளியே வர முயற்சித்து கூக்குரலிட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறீஸின் வடபகுதியிலுள்ள தெஸாலேனிக்கி எனும் பிரதேசத்தில், 45 வயதான பெண்ணொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் இறந்துவிட்டாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து பெரைய்யா எனும் இடத்திலுள்ள மயானமொன்றில் அப்பெண்ணினக் சடலம் புதைக்கப்பட்டது. இறுதிக்கிரியை முடிந்து உறவினர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறிய பின்னர், அப்பெண் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து கூக்குரல்கேட்டதாகவும் சவப்பெட்டியை உடைக்க முயற்சித்தமை போன்ற சத்தம் கேட்டதாகவும் மயான ஊழியர்கள் தெரிவித்தனர்.
மயானத்துக்கு அருகில் விளையாடிக்கொண்டிரந்த சிறார்கள் சிலரும் பெண்ணொருவர் கூக்குரலிடுவதை கேட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின் மயானத்துக்கு சென்ற பலரும் இத்தகைய சத்தத்தை கேட்டதாக கூறிய நிலையில் பொலிஸார் அங்கு வரவழைக்கப்பட்டு அப்பெண்ணின் புதைகுழியை தோண்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அதற்கிடையில் ஒரு மணித்தியாலம் கடந்த நிலையில் அப்பெண் இறந்த நிலையிலேயே சவப்பெட்டியில் காணப்பட்டார்.
இதனால் அப்பெண் மயக்கமடைந்த நிலையில் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பின்னர் உணர்வு திரும்பி வெளியே வர முயற்சித்த போதிலும் அது பலனளிக்காமல் இறந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இதனால் அப்பெண்ணின் இறப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கான சோதனைகள் நடத்தப்படுகின்றன.
ஆனால், பல்வேறு மருத்துவ சோதனைகளின் பின்னரே அப்பெண் இறந்ததை உறுதிப்படுத்தியதாகவும் அவர் இறந்து பல மணித்தியாலங்கள் கடந்த நிலையில் மீண்டும் உயிருடன் எழுந்திருக்க வாய்ப்பில்லை எனவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து பெரைய்யா எனும் இடத்திலுள்ள மயானமொன்றில் அப்பெண்ணினக் சடலம் புதைக்கப்பட்டது. இறுதிக்கிரியை முடிந்து உறவினர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறிய பின்னர், அப்பெண் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து கூக்குரல்கேட்டதாகவும் சவப்பெட்டியை உடைக்க முயற்சித்தமை போன்ற சத்தம் கேட்டதாகவும் மயான ஊழியர்கள் தெரிவித்தனர்.
மயானத்துக்கு அருகில் விளையாடிக்கொண்டிரந்த சிறார்கள் சிலரும் பெண்ணொருவர் கூக்குரலிடுவதை கேட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின் மயானத்துக்கு சென்ற பலரும் இத்தகைய சத்தத்தை கேட்டதாக கூறிய நிலையில் பொலிஸார் அங்கு வரவழைக்கப்பட்டு அப்பெண்ணின் புதைகுழியை தோண்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அதற்கிடையில் ஒரு மணித்தியாலம் கடந்த நிலையில் அப்பெண் இறந்த நிலையிலேயே சவப்பெட்டியில் காணப்பட்டார்.
இதனால் அப்பெண் மயக்கமடைந்த நிலையில் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பின்னர் உணர்வு திரும்பி வெளியே வர முயற்சித்த போதிலும் அது பலனளிக்காமல் இறந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. இதனால் அப்பெண்ணின் இறப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கான சோதனைகள் நடத்தப்படுகின்றன.
ஆனால், பல்வேறு மருத்துவ சோதனைகளின் பின்னரே அப்பெண் இறந்ததை உறுதிப்படுத்தியதாகவும் அவர் இறந்து பல மணித்தியாலங்கள் கடந்த நிலையில் மீண்டும் உயிருடன் எழுந்திருக்க வாய்ப்பில்லை எனவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.